Header Ads



புலிகளின் ஈவிரக்கமற்ற தன்மை மேற்குலகிற்கு தெரியவந்திருக்கும் - தினேஸ் குணவர்த்தன

விநாயகமூர்த்தி முரளீதரன் அறிக்கைக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கண்டியில் தெரிவித்துள்ளார்.

கருணாவின் அறிக்கை குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிராகவும் ஜனநாயக கட்டமைப்பிற்கு எதிராகவும் ஆயுதமேந்துபவர்களை அரசாங்கமும் சமூகமும் எதிர்ப்பதாக தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கருணா தனது கடந்தகாலம் குறித்து தெரிவித்த கருத்துக்களிற்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார் .

விசாரணைகள் இடம்பெறவேண்டும் உண்மை வெளிவரவேண்டும், என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளதை ஜெனீவா கேள்விப்பட்டிருக்கும் இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஈவிரக்கமற்ற தன்மை மேற்குலகிற்கு தெரியவந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.