அபுதாபியிலிருந்து 100 கர்ப்பிணிகள் உட்பட 275 பேர் இலங்கை வருகிறார்கள்
மெட்றோ
அபுதாபிக்கு தொழில் சென்று கொரோனா தொற்று நிலைமைகளால் அங்கு சிக்கியிருந்தவர்களில் 275 இலங்கையர்கள் (17/6) கட்டுநாயக்கவை வந்தடையவுள்ளனர்.
இவர்களில் 100 பேர் கர்ப்பிணிகளாவர். மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட பலரும் 275 பேரில் அடங்குவதாக கட்டுநாகய விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அபுதாபியில் தொழில் புரியும் 1.200 இலங்கையர்கள் நாடு திரும்பபுவற்கு தங்களது பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து, இவர்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு முதல் கட்டமாக இவர்கள் நாளை அழைத்து வரப்படுகின்றனர்.(சிகா)
Post a Comment