Header Ads



திரூகோணமலையில் அமைதியாகவும், வீட்டில் இருந்தவாறும் நோன்பு பெருநாளை கொண்டாடினர்

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்19 அசாதாரண சூழ் நிலையின் காரணமாக புனித நோன்புப் பெருநாளான இன்று (24)காலை இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தங்களது நோன்பு பெருநாளுக்கான தொழுகைகளை நிறைவேற்றினார்கள்.

 நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை மதித்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் சமூக இடைவெளிகளை பேணியும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டதை காண முடிந்தது.புனித றமழான் மாத நோன்பினை நோற்று இன்றைய தினம் நோன்பு பெருநாளை வீடுகளில் கொண்டாடி வருகின்றனர். 

கிண்ணியா,முள்ளிப்பொத்தானை,மூதூர்,கந்தளாய்,குச்சவெளி உள்ளிட்ட திரூகோணமலை மாவட்டத்தில் உள்ள மக்கள் அமைதியாகவும் வீட்டில் இருந்தவாறும் நோன்பு பெருநாளை கொண்டாடினர்.

1 comment:

  1. Alhamdulillah, இதில் இருந்து நாம் கட்சிபேதம், இயக்கபேதம் , தனிநபர் குரோதம் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு ஒற்றுமையை கடைபிடித்து எமது பொது எதிரியான இனவாதம் என்ற அரக்கனை வெற்றி கொள்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.