Header Ads



ராஜித மேன் முறையீடு

(எம்.எப்.எம்.பஸீர்)

வெள்ளை வேன் விவகாரம் குறித்த  ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன கடந்த 2019 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி  அனுமதித்த உத்தரவானது தவறானது என கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி,  மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இன்றையதினம், -14- முன்னள் அமைச்சர் ராஜிதவின் சட்டத்தரணிகள் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எற்கனவே கடந்த 2019 டிசம்பர் 31 ஆம் திகதி தன்னை பிணையில் விடுவித்த நீதிவானின் உத்தரவை, சட்ட மா அதிபரின்  மீளாய்வு மனுவை ஆராய்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன ரத்து செய்ததாக அம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், மேல் நீதிமன்றின்  குறித்த தீர்ப்பை  வலுவிழக்கச் செய்யுமாறு  கோரியுள்ளார். 

No comments

Powered by Blogger.