Header Ads



கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- இராணுவ தளபதி

சமூகத்திற்குள் பரவிய கொரோனா வைரஸ் கொப்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் காணப்பட்ட கொரோனா கொப்புகளை இதுவரையில் 75 வீதம் கட்டுபடுத்தியுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் முழுமையாக கட்டுப்படுத்தி விடலாம் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் கடற்படைக்குள் பரவிய முறை தொடர்பில் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக வைத்திய குழுக்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமகாலத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவதனால் எதிர்வரும் காலங்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் நோயாளிகள் கட்டாயம் ஏற்படுவார்கள்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கை காரணமாக இந்த நோயாளிகள் மூலம் கொரோனா வைரஸ் செல்ல இடமளிக்காமல் தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.