Header Ads



ஊழியர்கள் ஒன்றுகூடி உணவு, உண்பதை தவிர்க்க வேண்டும்

கொரோனா வைரஸ் பரவலானது மீண்டும் ஏற்படாதிருக்க மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இல்லையொன்றால், மீண்டும் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீண்டும் பகுதியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டுமென குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.