Header Ads



கிருமி நீக்கலில் ஈடுபட்ட, தயாசிறி மீது விமர்சனம்

குருநாகல் - ஹெட்டிபொலயில் நேற்று -03-  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர கிருமி நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழமையாக கிருமி நீக்கல் நடவடிக்கைகளை பயிற்சி தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்தே மேற்கொள்ள வேண்டும்.

எனினும் தற்போது சுயாதீனமாக பலர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய அளவில் கலவைகள் மேற்கொள்ளாது கிருமி நீக்கல் செயற்பாடு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அது பயனற்ற செயலாகவே இருக்கும்.

இந்த கிருமி நீக்கல் நடவடிக்கையால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது என்றும் பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தயாசிறி ஜெயசேகர, பொதுசுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலை பின்பற்றினாரா என்பது தெரியவில்லை என்றும் பொதுசுகாதார அதிகாரிகள் சங்கத்தலைவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.