Header Ads



6 மாதங்களுக்கு தேர்தல் வேண்டாம்

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனபல பக்சய அமைப்பின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போதைய கொரோனா அச்சுறுத்தலால் நிலைமை மோசமடைவதை தடுக்க இந்த முடிவு சிறந்த நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் மூலம் புதிய அரசாங்கம் உருவாகும் வரை சம்பந்தப்பட்டவர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி தலைமையில் தேசிய சபை மூலம் நாட்டை ஆட்சி செய்யலாம் எனவும் அவர் ஆலோசனை முன்வைத்துள்ளார்.

1 comment:

  1. NEE SOLRAMAATHIRI SHEITHA KAALAM
    MALI ERIVITTATHU.
    UNNAAVIRATHAM IRUNDU PAAR.

    ReplyDelete

Powered by Blogger.