Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளான 25 பேர், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நபர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டார். 

அதன்படி தற்போது 129 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. 

கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இந்நாட்டில் 159 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதேவேளை 25 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

No comments

Powered by Blogger.