Header Ads



முச்சக்கரவண்டியில் சென்ற பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் : சாரதி கைது

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு நடைபெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தில் பேருந்து இல்லாமையால் குறித்த மாணவி தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

தனிமையில் மாணவி சென்ற நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதினையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.