Header Ads



இன்னும் சில நாள்களில் சதி செய்வோர், யார் என்பது தெரியவரும் - சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி உரிய அனுமதிகளை பெற்றுக்கொண்டே நிறுவப்பட்டதென தெரிவிக்கும் அக்கூட்டணியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, அந்த கூட்டணியை அரசியல் களத்திலிருந்து துடைத்தெறிவதற்கான சதிகள் அரங்கேற்றப்படுகின்றன என்றும் சாடினார். 

கொழும்பில் இன்று -14- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,  

ஐக்கிய மக்கள் சக்தி என்ற முன்னணி உரிய வகையில் அனுமதி பெற்றுக்கொண்ட பின்பே நிறுவப்பட்டதெனவும், இன்று அந்த கூட்டணியை முடக்கும் முயற்சிகளில் பல தரப்புக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

எவ்வாறாயினும் அந்த சூழ்ச்சிகளை முறியடிக்கும் இயலுமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளதென தெரிவித்த அவர், நாட்டை அளிக்க முயற்சிப்போரே அவ்வாறு செயற்பட முயற்சிப்பதாகவும் சாடினார்.

இன்னும் சில நாள்களில் சதி செய்வோர் யார் என்பது தொடர்பாக தெரியவரும் என்றும்,  சதிகளை எதிகொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

மறுமுறையில் கொரோனவின் பாரதூரமான நிலைமையை முன்பே அறிந்திருந்தும், அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையை முக்கியமாக தெரிந்ததெனவும் சாடினார். 

அதேபோல், கொரோனா விவகாரத்தை மய்யப்படுத்திகொண்டு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை அரசியல் களத்திலிருந்து துடைத்தெறிவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் சாடினார்.

No comments

Powered by Blogger.