கொரோன தொற்றுள்ளவர், அநுராதபுர சிறையில் இனங்காணப்பட்டதா பதற்றத்திற்கு காரணம்?
அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது அங்கு தீ பற்றல் சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளர் ஒருவர் சிறைச்சாலையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பின்னர் அங்குள்ள கைதிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு பதற்ற நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment