Header Ads



கொரோனா பரிசோதனை, மேற்கொண்ட சிறீதரன்

அண்மையில் ஜெனீவா சென்று திரும்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா  சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பரிசோதனைகளை மேற்கொண்டார்.

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அவர் கொரோனா பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நேற்றைய தினத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அவருக்கு கொரோனா  தொற்று அறிகுறி உள்ளமையால் அம்புயூலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று முற்பகல் அனுப்பி வைக்கப்பட்டார்.

“அவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா  சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.

அவருக்கு உரிய முதலாம் கட்ட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது அதன் பின்னரே அவருக்கு கொரோனா  தொற்று உள்ளதா இல்லையா என்பது பற்றி அறிவிக்கப்படும்” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வைத்திய பரிசோதனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஐ.நா.வில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றி மார்ச் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்ததால் சமூக பொறுப்புடன் இரத்த பரிசோதனையின் தொடர்ச்சியாக கொரோனா நோய் தொடர்பான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்து எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் எனது தந்தையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வீடுதிரும்பிவிட்டார் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.