Header Ads



UNP க்கு ரணில்தான் பொறுத்தமான தலைவர் - பொதுஜன பெரமுன புகழாரம்

ஐக்கியத் தேசியக் கட்சி யானை, இதயமென சின்னங்களால் பிளவுப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐ.தே.கவுக்கு ரணிலே பொறுத்தமான தலைவர் எனவும் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ரோஹித ஆபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஐ.தே.க சின்னங்களால் பிளவுப்பட்டுள்ளது. நாட்டை ஆட்சி செய்வதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுத்தமற்றவர். ஆனால் ஐக்கியத் தேசியக் கட்சிக்கு அவரே பொறுத்தமான தலைவர் எனவும் கூறினார்.

1 comment:

  1. இவர் கட்சியை அடகுவைத்து ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கி சஜித்தை படுகுழியில் தள்ளும் பயங்கர சூழ்ச்சிகளைச் செய்து கொண்டே இருக்கின்றார். இறுதியில் அந்த குழியில் கடைசியில் அல்லது இடையில் விழுவது அவர்தான் என்பது இன்னும் அவருக்குப்புரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.