Header Ads



ரணில் பதவி விலக வேண்டும், ஏன் தேசிய பட்டியலில் வருகிறார் என்பது கடவுளுக்கு தான் தெரியும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ராகமையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிடைத்துள்ள தகவல்படி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும் அவர் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.

கட்சியின் தலைவரான அவர் ஏன் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வருகிறார் என்பது கடவுளுக்கு தான் தெரியும்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியே வேட்புமனுக்களை வழங்கும். ரணில் விக்ரமசிங்கவும் அதில் போட்டியிடலாம். அவர் விரும்பினால் தனியாகவும் போட்டியிடலாம்.

ரணில் விக்ரமசிங்க தற்போது அமைதியாக இருப்பது தொடர்பாக வியப்பாக இருக்கின்றது. பேச்சுவார்த்தைகளை நடத்தினோம், சில இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளோம்.

திங்கட் கிழமை கூட்டணியை உருவாக்குவோம். அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க கலந்துக்கொள்ள வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் தொடர்ந்தும் இருக்கின்றேன்.

கட்சியினரில் பெரும்பாலானோர் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளனர் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. பொது மக்களுக்குச் சேவை செய்ய கார் ஒன்றை வரிவிலக்குடன் இறக்குமதி செய்ய அரசாங்கம் வழங்கிய வாய்ப்பைத் துஷ்பிரயோகம் செய்து அந்த காரை மூன்றரை நான்கு கோடி ரூபாவுக்கு நீங்கள் விற்பனை செய்தது போல் ரணில் ஐயா, மத்திய வங்கியின் கொள்ளை உற்பட ஆயிரமாயிரம் கொள்ளைகளில் ஈடுபட்டு பதுக்கிவைத்திருக்கும் ஆயிரமாயிரம் கோடி டொலர்களைப் பாதுகாப்பதற்கு குறைந்த பட்சம், பாராளுமன்ற அங்கத்தவராகவாவது இருக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியில் இருக்கும் மச்சான்மார்கள் அவரைக் காப்பாற்றுவார்கள். இந்த நாட்டு மக்கள் வல்லவர்கள் மட்டுமன்றி அரசியல் வங்கரோத்துக் காரன்கள் நினைப்பது போல் மடையர்கள் அல்ல. எனவே எதிர்காலத்தில் அவர்கள் நிச்சியம் கள்வர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள். அப்போது தன்னை ஒருவாறு சட்டத்தில் இருந்து தப்புவதற்கு அரசியல் அதிகாரம் கொஞ்சம் தேவை. அதனைப் பெறத்தான் இந்த காவாளிகள் இந்தப் பாடுபடுகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.