அமெரிக்காவின் நடவடிக்கைகள் இன்றைய அரசுக்கு, ஆதரவு அலையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளாகும்
- மனோ கணேசன் -
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் எம்.சி.சி. ஒப்பந்தத்தை கேட்டு, ஆளை பிடித்து, எமது அமைச்சரவைக்குள் கொண்டு வர செய்தார்கள்.
இன்று சவேந்திர சில்வா விவகாரத்தை, பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தூக்கி பிடிக்கிறார்கள்.
இவற்றை செய்து இந்நாட்டு தமிழ் மக்களை பந்தாக்கி, அமெரிக்கா பந்து விளையாடுகிறதா என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
அமெரிக்காவின் நடவடிக்கைகள் இரண்டும் அன்றைய எதிர்கட்சிக்கு, இன்றைய அரசுக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளாகும்.
அமெரிக்கா தனது "பிரஜை" களால் நடத்தப்படும் இந்த அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றதா என கேட்க விரும்புகிறேன்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இருந்து வெளியேறும் அமெரிக்கா, இன்று சவேந்திர சில்வா பற்றி பேசி தமிழ் மக்களை பந்தாக்கி "பந்து விளையாடுகிறதா" எனவும் கேட்க விரும்புகிறேன்.
Post a Comment