Header Ads



தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை - பசில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியிருந்தார்.

இதன்போது விமான நிலையத்தில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டு்ள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையில் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 comment:

Powered by Blogger.