Header Ads



பேஸ்புக் பார்த்து ஜூஸ் தயாரித்தது, பருகிய நபர் உயிரிழப்பு, கம்பஹாவில் சோகம்

பேஸ்புக்கில் வந்த தகவலை பார்த்து ஜூஸ் செய்து பருகிய நபர் உயிரிழப்பு. #இலங்கை

பேஸ்புக்கில் கூறப்பட்ட தேகாரோக்கியத்துக்கான சாற்றை (ஜூஸ்) பருகிய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.  36 வயதுடைய அவர் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார்.

இந்த நிலையில் பேஸ்புக்கில் கூறப்பட்ட படி “கஜ மாடரா”மரத்தின் இலைகளை சாறாக பிழிந்து அதனை பருகி வந்ததாக உயிரிழந்தவரின் தாயார் சாட்சியம் அளித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் இந்த சாற்றைப் பருகிய 10 நிமிடங்களில் தனது மகன் சுகவீனமடைந்ததாகவும், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமானதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.

இதேவேளை பிரேத பரிசோதனையின் போது மரணமானவரின் உடலில் நஞ்சு கலந்திருந்தமை கண்டறியப்பட்டது.

1 comment:

  1. These kind of information NAMING THE ITEMS used by the dead, should not be made public. As there will be my people, who wanted this type of death, may reach the tree and use the same methods to die.

    ReplyDelete

Powered by Blogger.