Header Ads



சஜித் தலைமையிலான கூட்டணியை, தோல்வியடையச் செய்வதாக சு.க. சூளுரை

சஜித் பிரேமதாஸ தலைமையில் அமைக்கப்படவுள்ள அரசியல் கூட்டணியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடையச் செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சூளுரைத்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் பிரதமர் என்ற ரீதியின் நாட்டு பிரஜை என்ற ரீதியிலும் மக்களுக்கான யோசனைகளை முன்வைக்க முடியும்.

அதேபோன்று அரசியல் வட்டாரங்களிலும் கட்சி பேதமின்றி இணைந்து செயற்படவும் முடியும். இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் எவ்வித இரகசிய அரசியல் ஒப்பந்தமும் கிடையாது.

ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அதே பழைய கூட்டணியையே அமைத்திருக்கிறது. கட்சிக்குள் பாரிய வெடிப்புக்களும், பிளவுநிலைகளும் காணப்படுகின்றன.

இந்த கூட்டணியையே நாம் ஜனாதிபதித் தேர்தலின் போது தோல்வியடைச் செய்தோம். பொதுத் தேர்தலிலும் இவர்களை தோல்வியடைச் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்குவோம்” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.