Header Ads



ரஞ்சனின் சகல தொலைபேசி பதிவுகளையும் வெளியிட கோரிக்கை - அரசாங்கமும் சிக்குமென எதிர்பார்ப்பு

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களில் தமக்கு சாதகமான பகுதிகளை மாத்திரம் தெரிவு செய்து பகிரங்கப்படுத்துவதற்கு பதிலாக அனைத்து குரல் பதிவுகளை பகிரங்கப்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அனைத்து குரல் பதிவுகளையும் பகிரங்கப்படுதுங்கள். தெரிவு செய்து, தமக்கு சாதகமானவைற்றை மாத்திரம் வெளியிடாமல் அனைத்தையும் வெளியிடுங்கள். அப்போது இந்த அரசியல் முறையில் இருக்கும் அசிங்கத்தை மக்கள் புரிந்துக்கொள்ள முடியும்.

அதேபோல் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை மட்டுமல்ல இப்படி நீதிமன்றத்திற்கு, சட்டத்திற்கு, ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு அழுத்தங்கள் அல்லது கோரிக்கை விடுத்த குரல் பதிவுகளையும் வெளியிடுங்கள். இவர்கள் உண்மையில் என்ன செய்தார்கள் என்பது மக்கள் புரிந்துக்கொள்ள முடியுமாயின் நேரம் பெறுமதியாக இருக்கும்.

ஒரு அணியினர் நடந்த இந்த சம்பவத்துடன் மக்கள் விடுதலை முன்னணியை கோர்த்து விட முயற்சித்து வருகிறது. நாங்கள் தப்பிக்க எங்களுக்கு எந்த வழக்குகளும் இல்லை.

நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளும் வர்த்தகங்கள் எதுவுமில்லை. அரசாங்கத்தின் உதவியுடன் சிங்கப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தேவையுமில்லை. இதனால், எந்த குரல் பதிவுக்கும் நாங்கள் பயமில்லை.

கடந்த காலத்தில் இலஞ்ச ஆணைக்குழு, குற்றவியல் விசாரணை திணைக்களம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பன வழக்கு தொடர்ந்த நபர்களின் தொலைபேசிகளை பரிசோதித்தால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணம், சிலர் நீதிமன்றங்களில் எதிர்பார்த்த பிணை கிடைத்த காரணம் என்பன மிகவும் தெளிவாக தெரியவரும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

2

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களில் அரசாங்கத்திற்கு சாதகமான பகுதிகளை மாத்திரம் தொகுத்து அரச ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் தம்மிடம் இருக்கும் அனைத்து குரல் பதிவுகளையும் இணையத்தளத்தில் வெளியிடுமாறும் அவரிடம் கோரிக்கை விடுப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து குரல் பதிவுகளையும் மக்கள் கேட்கும் வகையில் வெளியிடுவதன் மூலம் மாத்திரமே இந்த தொலைபேசி உரையாடல்களை அரசாங்கமும் மேலும் சில தரப்பினரும் தமக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்வதை நிறுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இப்படி செய்யவில்லை என்றால், ரஞ்சன் ராமநாயக்க பல ஆண்டுகளாக சேமித்து வைத்துள்ள குரல் பதிவுகளுக்கு எந்த பெறுமதியும் இல்லாமல் போய்விடும் எனவும் வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்னிடம் இருந்த ஒரு லட்சத்து 21 ஆயிரத்திற்கும் அதிகமாக குரல் பதிவுகள் வேறு தரப்பினரின் கைகளுக்கு எவ்வாறு சென்றது என்பது ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த தரப்பினர் அவற்றை தவறாக பயன்படுத்துவதை அவரால் தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. One shot’s real name is Sadda Vidda Rajapaksha Palangapathira Ambakumarage Ranjan Leo Sylvester Alponso. He is also a member of Rajapaksha Dynasty. I doubt that he got arrested himself just to publish all these audios favoring Pohtuwa at the forthcoming general election because the audio conversations between Ranjan and Wijedasa Rajapaksha, ex justice minister haven’t leaked yet.

    ReplyDelete

Powered by Blogger.