Header Ads



சஜித் தலைமையில் இன்றுமுதல், கூட்டணி அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (16) மாலை நடைபெற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு  கலந்துரையாடலில் பங்கேற்ற பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராக தெரிவுச் செய்யப்பட வேண்டும் என தீர்மானித்தாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதன் போது தெரிவித்தார். 

எனினும் நேற்றைய கூட்டம் எந்தவித இணக்கபாடும் இன்றி நிறைவடைந்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று முதல் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.