ரஞ்சன் சார்பில், நீதிமன்றத்தில் மனு
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்படும் போது பொலிஸார் கைப்பற்றிய இறுவட்டுக்களில் இருக்கும் குரல் பதிவுகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டமை தொடர்பாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி நுகோகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று -08- இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து கைப்பற்றிய குரல் பதிவுகள் ஊடகங்களில் எப்படி வெளியிடப்பட்டது என்பது சிக்கலுக்குரியது என்பதை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதாக சட்டத்தரணி ஆஷா கஹவத்த தெரிவித்துள்ளார்.
குரல் பதிவுகளை நீதிமன்றத்தின் பொறுப்பில் எடுக்க வேண்டும் என மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment