Header Ads



எதிர்கால எந்தத் தேர்தலிலும், பொதுஜன முன்னணி மாபெரும் வெற்றி பெறும்

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும்.

தாமரை மொட்டு' சின்னத்தை எக்காரணம் கொண்டும் மாற்றவேமாட்டோம் என அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எந்த சக்தியாலும் கவிழ்க்கவே முடியாது. நாட்டு மக்களின் ஆணைக்கேற்ப எமது ஆட்சியைக் கொண்டு நடத்துவோம்.

அனைத்து இன மக்களினதும் மனங்களை வெல்லும் வகையில் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்காமல் நாட்டை அதிநவீன முறையில் அபிவிருத்தி செய்வதே எமது இலக்கு.

நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என இனிமேல் நடைபெறவுள்ள எந்தத் தேர்தலிலும் எமது கூட்டணிக் கட்சியே மாபெரும் வெற்றி பெறும்.

தாமரை மொட்டுதான் எங்கள் சின்னம். இது வெற்றியின் குறியீடு. இந்தச் சின்னத்தை எக்காரணம் கொண்டும் மாற்றவேமாட்டோம்.

ஊழல், மோசடி ஆட்சியை நடத்தியதால் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களினால் தோற்கடிப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று பிளவடைந்து காணப்படுகின்றது. இந்த கட்சி எமக்கு இனிமேல் சவால் அல்ல" - என்றார்.

No comments

Powered by Blogger.