ரஞ்சனின் குரல் பதிவு விவகாரத்தில் கண்ணாடி, மாளிகையில் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நலன் அறிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று -16- வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, ஹேசா விதான, பாலித தெவரப்பெரும ஆகியோரே இன்று -16- சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.
அங்கு கருத்து வெளியிட்ட ஹேசா விதான, மற்றைய தரப்பினரின் அனுமதியின்றி ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தது ஒழுக்கத்திற்கு விரோதமான செயல் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த குரல் பதிவுகளை பயன்படுத்தி அரசாங்கம் விளையாடுகிறது. இந்த விளையாட்டை தொடர்ந்தும் செய்தால், மறுமொழி வழங்க ரஞ்சன் ராமநாயக்க நடவடிக்கை எடுப்பார்.
அரசாங்கத்தில் இருக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சனுடன் உரையாடிய தொலைபேசி குரல் பதிவுகள் வெளியானால், அவர்களின் உண்மையான சுயரூபத்தை மக்கள் காண முடியும். இதனால், கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என ஆளும் கட்சியினருக்கு கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment