Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு எதிராக, ரதன தேரர் இன்று முறைப்பாடு

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இதுவரையில் விசாரணைகள் முன்னெடுக்கபடாமை குறித்து வினவுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் இன்று -18-காவல்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவிற்கு சென்றிருந்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டகளப்பு தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டமைக்கு கிடைக்க பெற்ற நிதி மற்றும் அதனை செலவிட்ட விதங்களில் முரண்பாடு காணப்படுவதாக தெரிவித்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அது குறித்து விசாரணைகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடாத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.