Header Ads



சொந்த வாகனத்தை பயன்படுத்துகிறேன், எனது நிதியில் எரிபொருள் வாங்குகிறேன் - மாளிகையில் வசிக்கமாட்டேன்

தாம் எதற்கும் அஞ்சுபவர் அல்ல என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அசலக பகுதியில் இன்று -06- இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது பயணத்திற்காக தான், தனிப்பட்ட வாகனத்தையே பயன்படுத்தியதாகவும், தனது சொந்த நிதியில் எரிபொருட்களை கொள்வனவு செய்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகும்போது தான் அந்த முன்னுதாரணத்தை பின்பற்றுவேன்.

தான் மாளிகையில் வசிக்கப்போவதில்லை.

ஏனையவர்கள் அச்சமடைந்தாலும் நான் ஒருபோதும் அச்சமடைவதில்லை.

அச்சம் என்பது தனது உடலில் துளியளவேணும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.