Header Ads



அதாவுல்லாவின் கூட்டம் மீது, கல்வீசி அடாவடி - அட்டானைச்சேனையில் சம்பவம்

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை குழப்புவதற்கான நடவடிக்கைகள் அட்டானைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்டானைச்சேனை பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேசிய காங்கிரஸின் பொதுக் கூட்டம் இன்று இரவு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காாங்கிரஸ் ஆதரவாளர்னளினால் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மேடையை நோக்கி கற்களும் வீசப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பேசிக்கொண்டிருக்கும் போது சத்தம் போட்டு இடைஞ்சல்கள் ஏற்படுத்தியதோடு, சில நிமிடங்கள் அமைதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சரின் கூட்டத்தினை நிறுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தெரிவித்தார்.

பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அமைதியற்ற சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. Ataaulla did several adavadi earlier against his opponents during his darbar including kidnaping,threatening etc.whichhe learnt from him mara guru.

    ReplyDelete
  2. கோத்தாவின் பக்கம் கொஞ்சம் பேர் இருப்பதும் நல்லது. பேருவளையிலும் ஒரு கூட்டம் இருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.