Header Ads



சஜித்தும் எம்முடன் பயணிப்பர் என்ற நம்பிக்கையில் ஆதரவு வழங்குகிறோம் - ஆதிவாசிகள் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தொடர்ந்தும் சூடு பிடித்து வரும் நிலையில் பிரதான காட்சிகள் அரசியல் ரீதியாக தமக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய தினம் இலங்கையின் ஆதிவாசிகள் சமூகத்தினர் தமது ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்குவதாக இன்று -31-உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவர் ஊருவருகே வன்னில அத்தோவின் பிரதிநிதியொருவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர், 35000 ஆண்டுகால வரலாற்றை கொண்ட நாம் எமது சமூகத்தினருக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

ஆதிவாசிகளின் முன்னாள் தலைவர் ஊருவருகே திசஹாமி மற்றும் தற்போதைய தலைவரான வன்னில அத்தோவின் காலத்திலும் ஆதிவாசிகளான எம்முடன் மிகவும் நெருங்கிய உறவை பேணியவர் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாஸாவே ஆவார்.

ஆதிவாசிகள் வாழும் மஹியங்கன - தம்பான பிரதேசத்திற்கு குடிநீரை வழங்கியதும் அவரே ஆவார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை போல எமக்கு அன்பு செலுத்தியவர்கள் யாரும் இல்லை.

அந்த நன்றி கடனிற்காகவே நாம் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். தந்தையைப்போல சஜித்தும் எம்முடன் இணைந்து பயணிப்பர் என்ற நமபிக்கையில் என்ற நம்பிக்கையில் எம் வாக்குகளை அவரிற்கு வழங்க தயாராக உள்ளோம்.

No comments

Powered by Blogger.