Header Ads



நான் ஜனாதிபதியானால் பெண்களுக்கு மாதவிடாய் (நாப்கின்ஸ்) இலவசமாக வழங்குவேன் - சஜித்

பெண்களுக்கான மாதவிடாய் கால அணையாடைகளை ( நாப்கின்ஸ்)  தங்களது அரசாங்கத்தின் கீழ் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் உரிய மாதவிடாய் கால அணையாடையை பயன்படுத்தாத காரணத்தினால் பாரதூரமான சுகாதார சீர்கேடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மாதாந்தம் ஏற்படும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தங்களது அரசாங்கத்தால் உரிய தீர்வு பெற்று கொடுக்கப்படும்.

பாதுகாப்பான மாதவிடாய் கால அணையாடைகளை பெற்று கொள்ள முடியாத சகல பெண்களுக்கும் தங்களது அரசாங்கத்தின் கீழ் இலவசமாக அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.