Header Ads



இத்தாலியில் விபத்து - இலங்கை இளைஞன் மரணம்


இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து நேற்றையதினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ் விபத்தில் பலியான ஷர்மிலன் இத்தாலிய பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளதுடன், ஒரு குழந்தையின் தந்தையுமாவார்.

மேலதிக விசாரணைகளை இத்தாலி நாட்டின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.