Header Ads



சஜித் தப்பிக்க வாய்ப்பில்லை, கையாளும் மந்திரம் மைத்திரிபாலவிடம் உள்ளது - வசந்த சமரசிங்க

சஜித்தை கையாளும் மந்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ´சஜித் பிரேமதாசவை கையாளும் மந்திரம் ஜனாதிபதியிடம் உள்ளது. பிணை முறி மோசடியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு 75 மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளதாக அர்ஜுன் அலோசியஸும் கூறியுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட ஆணைக்குழு அறிக்கையில் 106 பக்கங்களை மைத்திரிபால மறைத்துக் கொண்டார். 

அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து அழைத்து வருவதற்கான ஆவணங்களை தயாரித்ததாக கூறினார்.. தற்போது அவை தொடர்பில் பேச்சு இல்லை. 

அது வேறு ஒன்றுக்காகவும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கை தொடர்பான முடிவு இந்த தேர்தலுடன் தெரியவரும். அதற்கு தற்போது ஒரு விளையாட்டை ஆரம்பித்துள்ளார். 

அதற்காகதான் அந்த 106 பக்கங்களை மறைத்தார். 

அர்ஜுன் அலோசியஸ் 3250 மில்லியன் ரூபாய்களை பகிர்ந்தளித்த அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் குறித்த பக்கங்களில் உள்ளன. 

கொழும்பு கட்டடங்களில் மைத்திரிபால சிறிசேனவின் மருமகன் மற்றும் மகளுக்கு வீடுகள் இல்லை என்றா கூறுகிறீர்கள்? 

அலோசியஸ் பணம் கொடுத்த பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை என்றா கூறுகிறீர்கள்? 

ஐ.தே.கட்சியில் 52 பேர் உள்ளனர். அந்த 52 பேரில் இருந்து சஜித் தப்பிக்க வாய்ப்பில்லை. பட்டியல் அதனால்தான் வௌியே வராமல் உள்ளது. 

அதனை காண்பித்துதான் மைத்திரிபால சிறிசேன சஜித் பிரேமதாசவை கட்டுப்படுத்தி வருவதாக´ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.