Header Ads



தமிழ் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு, அடிபணிய மாட்டோம் – கபீர் திட்டவட்டமாக அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அடிபணியப் போவதில்லை என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் ஒரு கொள்கை அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம் எனவும், வாக்குகளுக்காக எந்தவொரு நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே ராஜபக்சக்களுக்கு ஆதரவளித்து வந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இவர் போன்ற ஆட்கள், தனது இனம் சார்ந்த வரையறைகளுக்குள் அரசியல்செய்வது தான் சாணக்கியமாக அமையும். இதுபோன்ற கருத்துகள் சிலவேளைகளில் அவருடைய இருப்புக்கே சவாலாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.