Header Ads



பாக்தாதி கொலைக்கு ரணில் மகிழ்ச்சி - அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிப்பு

இஸ்லாமிய நாடு என அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறித்து,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தலைவர்  பக்தாதி கொல்லப்பட்டதை  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (27) உறுதிப்படுத்திய சற்று நேரத்தில், பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காக,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க படையினருக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.