Header Ads



அநுரகுமாரவுக்கு 2 ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆதரவளிக்க தீர்மானம்...??

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் ஒன்றிணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, தேசிய அபிவிருத்தி முன்னணியின் வேட்பாளர் தொழிலதிபர் ரொஹான் பல்லேவத்த ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் அனுர குமார திஸ்ஸநாயக்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, தேர்தலில் இருந்து விலக முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறுவதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.