Header Ads



24 மணிநேரம் கடந்துவிட்ட போதிலும் எனது, சவாலுக்கு கோத்தபயவிடமிருந்து பதில் இல்லை

தன்னுடன் நேருக்கு நேர் நேரடியான தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு சவால் விடுத்து 24 மணி நேரம் கடந்துள்ள போதிலும் அந்த சவாலுக்கு இன்னும் அவர் பதிலளிக்கவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக கோத்தபாய ராஜபக்சவுக்கு நேற்று இந்த சவாலை விடுத்திருந்தார்.

தமது கருத்துக்களை பாதுகாப்பதற்காக முன்வரும் ஜனாதிபதியை தெரிவு செய்ய இலங்கை வாக்காளர்களுக்கு சந்தர்ப்பம் இருக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச டுவிட்டரில் இன்று இட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.