Header Ads



2 நாட்களில் அரசியலில், எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறும் - சஜித்

எதிர்வரும் இரண்டு நாட்களில் அரசியல் அரங்கில் பல்வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன, மத பேதங்கள் கடந்து ஐக்கிய இலங்கையில் அனைத்தின மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் ஆட்சியை நிறுவுவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஜனநாயகமா, சர்வாதிகாரமா வேண்டும் என்பதை மக்கள் தீர்ப்பின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எல்பிட்டிய தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.