தேர்தலில் ரணிலே களமிறங்குவார் - தமிழ் கட்சிகள் சஜித்திற்கு ஆதரவில்லை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவே களமிறங்குவார் என அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தனது பெயரை வெ ளிப்படுத்த விரும்பாத குறித்த ஐ.தே.க. முக்கியஸ்தர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கமைய அக் கட்சியின் தலைவரே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். கட்சியின் செயற்குழுவிலும் பாராளுமன்றக் குழுவிலும் இரகசிய வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டால் அதில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார்.
அத்துடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்த கூட்டணி ஒன்று விரைவில் தோற்றுவிக்கப்படவுள்ளது. பௌத்தர்கள் உள்ளிட்ட இலங்கையின் சகல சமூகங்களினதும் ஆதரவைத் திரட்டுவதற்கு ரணில் விக்கிரமசிங்க போன்ற முதிர்ச்சிமிக்க சிரேஷ்ட தலைவரே பொருத்தமானவர்.
தமிழ் கட்சிகள் தாம் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்கனவே கணிசமான பௌத்த மக்களின் வாக்குகள் உள்ளன. அத்துடன் இம்முறை முதன் முறையாக வாக்களிக்கும் இளைஞர், யுவதிகளின் வாக்குகள் முக்கியமாக அமையப் போகின்றன.
தமது தொகுதிகளில் ஆதரவை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சில எம்.பி.க்களே சஜித் பிரேமதாசவை வேட்பாளராக முன்னிறுத்துகின்றனர். இது கட்சியைக் கடுமையாகப் பாதிப்பதுடன் தோல்விக்கு இட்டுச் செல்லும் செயற்பாடு என்பதை அவர்கள் உணராதுள் ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட் டுள்ளார்.
அப்போ தமிழ் கட்சிகளுக்கு கோத்தாவை வெல்ல வைக்க ஆசை உள்ளது
ReplyDeleteGood move
ReplyDeleteசிங்கள தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கட்சி ஒன்றினை தங்களுக்குள் ஒருங்கிணைத்து ஒரு பொது உடன்படிக்கையின்கீழ் போட்டியிட வைப்பது காலத்தின் மிகச் சிறந்த தேவையாகும். அரசமைப்பின் விதிமுறைகளின் பிரகாரம் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் அனைவரும் தமக்கிடையேயுள்ள பேதங்களை மறந்து நாட்டின் அபிவிருத்தியினையும் மக்கள் நல்வாழ்வினையும் கருத்தில் கொண்டு தமது செயற்பாடுகளை அமைக்கின்றபொழுது சிங்கப்பூர் என்ன அமெரிக்காவை மிஞ்ஞிய பொருளாதார வளத்தையும் நேர்த்தியான நிர்வாக அமைப்பையும் கட்டுமானத்தையும் உடைய நாடாக இலங்கை மாறும். அதற்கு தேவையானவை மக்கள் பலமே. அமெரிக்க பிரஜையான கோத்தபாய அவர்கள் இலங்கை அரசியலில் ஏன் குதித்துள்ளார்கள் என்பதனை காரண காரியத்துடன் மக்களுக்கு விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தும்போது நிச்சயமாக வெற்றி இவர்கள் பக்கமே மிளிரும் என்பது வெள்ளிடைமலை. (மிக முக்கிய குறிப்பு: 2025ல் நடைபெறப்போகும் தேர்தல் சமயம் நான் உயிருடன் இருப்பேனா என்று சொல்ல முடியாது. இந்த விடயத்தை உலகம் முடியும் வரை சுழற்சிமுறையில் மக்களுக்கு ஒவ்வொரு நான்கரை வருட முடிவிலும் எடுத்துச் சொல்வதற்கு என்னைப்போல் வேலையில்லாத யாரும் முன்வந்தால் உதவியாகவும் “முஸ்பாத்தி” யாகவும் (வேடிக்கை) இருக்கும். ஏனெனில் எங்களுடைய மக்களை என்ன சொல்லியும் ஏன் இறைவன் மாறுவேடம் போட்டு வந்தாலும்கூட திருத்த மாற்ற முடியாது).
ReplyDelete