Header Ads



ரணிலுடன் பேசுவதற்காக, அலரி மாளிகைக்குள் புகுந்தார் சஜித்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச அலரி மாளிகைக்கு சற்று முன்னர் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த இருவரும், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

கட்சிக்குள் உருவாகி இருக்கும் முறுகல் நிலையை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தனியாக ஞாயிறு இரவு சந்திக்கவிருந்தனர்.

எனினும், அந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், குறித்த சந்திப்பு தற்போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.