Header Ads



கோத்தாபயவின் உடல்நிலைக்கு பாதிப்பா, எனக்கேட்டு எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன - மகிந்த

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச போலியான பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தாபய மீது சேறுபூசுவதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொதுமக்களை இவ்வாறன பொய் பிரச்சாரங்கள் மூலம் தவறாக வழிநடத்தமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய உடல்நலப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்  என சித்தரிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் படங்களை வெளியிடுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தாபயவின் உடல்நிலைக்கு ஏதாவது பாதிப்பா என கேட்டு எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன என மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொய்யான தகவல்களை மக்கள் நம்பக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.