ஆளடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணங்களை, சமர்ப்பிக்குமாறு கோத்தபயவுக்கு நீதிமன்றம் உத்தரவு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட ரீதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றன காணப்பட்டால் அவற்றை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக அமைச்சு, அமைச்சின் செயலாளர், குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தேசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
Post a Comment