Header Ads



சஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர்.

இதனடிப்படையில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் அசோக வடிகமங்காவ, பொலன்நறுவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் திலக் மஹாலேக்கம்கே, புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் நியோமால் பெரேரா,

காலி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் நந்திமித்ர சொய்சா, கேகாலை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சமந்தா கருணாரத்ன ஆகியோர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உபாலி பியசோம தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் உபாலி பியசோம, அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கடந்த 26 ஆம் திகதியே சிறிகொத்தவிற்கு சென்று சஜித்தை சந்தித்து அவரது தேர்தல் பணிகளில் பங்களிப்பு வழங்க இணக்கம் வெளியிட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் பொறுப்பை அமைச்சர் சஜித் பிரேமதாச, உபாலி பியசோம மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.