1000 சவூதி படையினர் சரண், ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு - நஜ்ரான் வீழ்ந்தது, பெரும் ஆயுதங்களையும் கைப்பற்றினர்
சவூதி அரேபியாவின் நஜ்ரான் பிரதேசங்களை ஹௌதி படையினர் கைப்பேற்றி உள்ளதுடன், ஆயிரக்கணக்கான சவூதி இராணுவத்தினர்களை கைது செய்து, கனரக ஆயுதங்களையும் கைப்பேற்றி உள்ளதாக ஹௌதி இயக்க பேச்சாளர் ஜெனெரல் சாரியாவை மேற்கோள்காட்டி சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
நஜ்ரான் மாகாணம் என்பது சவூதி அரேபியாவின் தென்மேற்கு பிரதேசத்தில் யேமன் நாட்டின் எல்லை அருகே உள்ளது. யேமனில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹௌதி போராளிகளுக்கும் சவூதி இரானுவத்தினர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக சண்டைகள் நடைபெற்று வருகின்றது.
ஆனாலும் யேமனில் உள்ள ஹௌதி இராணுவத்தினர்களின் நிலைகள் மீது சவூதி அரேபியா நடாத்துகின்ற விமானத்தாக்குதல்கள் சர்வதேச கவனத்தை ஈர்ப்பது போன்று, சவூதி - யேமன் எல்லை அருகே நடைபெற்று வருகின்ற தரைச் சண்டைகள் பிரபல ஊடகங்களின் கவனத்தினை ஈர்ப்பதில்லை.
அண்மைய சில நாட்களாக நடைபெற்ற உக்கிர சமர் காரணமாக சவூதி அரேபியாவுக்குள் ஊடுருவி நஜ்ரான் மாகாணத்தின் பல பிரதேசங்களை ஹௌதி இஸ்லாமிய படையினர்கள் கைப்பேற்றி உள்ளனர்.
அத்துடன் சவூதி அரேபியாவின் மூன்று இராணுவ பிரிவை சேர்ந்த நிலைகை சுற்றிவளைத்து தாக்கியதில் ஏராளமான இராணுவத்தினர்கள் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்கள் சரணடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
சரணடைந்த சவூதி இராணுவத்தினரில் முக்கிய தளபதிகளும் அடங்குவதாக கூறப்படுகின்றது. இது சம்பந்தமாக சவூதி எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
சவூதி அரேபியா தனது அமெரிக்க, இஸ்ரேல் சார்பு கொள்கைகளை கைவிட்டுவிட்டு அனைத்து இஸ்லாமிய நாடுகளுடனும் சேர்ந்து பயணிப்பதுடன், தனது அண்டைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது ஆரோக்கியம் என்பது உலக இஸ்லாமியர்களின் எதிர்பார்ப்பாகும்.
முகம்மத் இக்பால்
COMMENT BY UNKNOWN IS
ReplyDeleteEXACTLY CORRECT.THE MORE
THEY FOLLOW WAHABISAM,
THE MORE THEY WILL BE SEVERELY
PUNISHED BY ALLAH.
BIN SALMAN HAS SAID WAHABISM
WAS SPREADED DUE TO THE REQUEST
OF THE WEST.
BUT HE DIDNT TAKE ANY STEPS
TO SPREAD ISLAM, MAY BE
BECAUSE M.SALAMN HIMSELF IS
A WAHABI.
REPORTERS INAMERICA.