நீர்கொழும்பு - பெரியமுல்லயில் வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது
நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையமொன்றுக்கு வருகைதந்த ஒருவர் அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்துள்ளார்.
சந்தேக நபர் நேற்று (21) அதிகாலை இவ்வாறு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் வருகைதந்து அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைத்துள்ளமை தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்ளில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய சந்தேக நபரை நேற்று மாலை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment