Header Ads



சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம், குண்­டு­வெ­டிப்­புகள் இடம்பெற்­றி­ருக்­காது என்ற குற்­றச்­சாட்டை ஏற்கமுடியாது - ஹபீஸ் நஸாட்

சஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புகள் இடம்பெற்­றி­ருக்­காது  என தெரி­வுக்­குழு முன்­னி­லையில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டை முற்­றாக மறுப்­ப­தாக பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ஹபீஸ் நஸாட் நவாவி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

ஒருவர் மீது நியா­ய­மான சந்­தேகம் இருந்தால் அதன் அடிப்­ப­டையில் பொலி­ஸா­ருக்கு அந்த நபரைக் கைது­செய்ய முடியும். ஒரு­வரை கைது­செய்ய முடி­யுமா என சட்­டமா அதி­ப­ரிடம் கேட்­ப­தாயின், பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு ஒரு­படி மேற்­சென்றே நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­றும்­அவர் சாட்­சி­ய­ம­ளித்தார். 

உயிர்த்த ஞாயிறு  தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்த நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ம­ளிக்க அழைக்­கப்­பட்­ட­போதே இந்த வாக்­கு­மூ­லத்தை வழங்­கினார்.  அவர்  மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

ஈ.ஈஆர் பிரிவில் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் ஊடாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு கோப்பு ஒன்று வரு­மாயின் எனக்கு அந்தக் கோப்பு வழங்­கப்­படும். பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ளரின் இறுதி அறிக்கை அடங்­கிய கடி­தங்கள் சில 2017-06-07 எமக்குக் கிடைத்­தன.

 2017-06-12ஆம் திகதி எனக்கு அந்த கடி­தங்கள் அடங்­கிய கோப்பு கிடைத்­தது. இதனை அப்­போது எனது கண்­கா­ணிப்பின் கீழ் இருந்த குழுவில் மலீக் அஸீ­ஸிடம் வழங்­கினேன். ஏன் இந்த கோப்பு  நவா­வியின் ஊடாக அஸீ­ஸக்கு வழங்­கப்­பட்­டது என பிரச்­சினை உள்­ளது. இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் சஹரான் என்ற நபர் கூறிய கருத்­துக்கள் தமிழ் மொழியில் இருந்­த­மையால் மலீக் அஸீ­ஸிடம் இந்த கோப்பை பார்க்­கு­மாறு வழங்­கி­யி­ருந்தேன். அதன் அடிப்­ப­டை­யி­லேயே அக்­கோப்பை வழங்­கினேன்.

1998 ஆம் ஆண்­டி­லி­ருந்து பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வுடன் இணைந்து பல்­வேறு வழக்­கு­களில் செயற்­பட்­டுள்ளேன். 2014ஆம் ஆண்டு நெருக்­க­மாக செயற்­பட்டு வரு­கின்றேன். பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ள­ரு­டைய இறுதி அறிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே அது தொடர்பில் கோப்­பொன்றை ஆரம்­பித்தோம். அதில் குறிப்­பிட்ட நபர் இரண்டு கருத்­துக்­களைக் கூறி­யுள்ளார். 

முஸ்­லிம்கள் பிறந்­த­நாளை கொண்­டா­டு­வது தவ­றா­னது என்று ஒரு பேச்­சிலும், தேசிய கொடியை ஏற்­று­வது இஸ்­லாத்­துக்கு எதி­ரா­னது என மற்­று­மொரு பேச்­சிலும் கூறி­யுள்ளார்.  இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குறித்த நபரை கைது­செய்து விசா­ரிக்க முடி­யுமா என கேட்­டி­ருந்­தனர். 

ஏதா­வது குற்றம் இழைத்­தி­ருப்­ப­தாக ஒருவர் மீது நியா­ய­மான சந்­தேகம் இருந்தால் அதன் அடிப்­ப­டையில் பொலி­ஸா­ருக்கு அந்த நபரைக் கைது­செய்ய முடியும். ஒரு­வரை கைது­செய்ய முடி­யுமா என சட்­டமா அதி­ப­ரிடம் கேட்­ப­தாயின், பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு ஒரு­படி மேற்­சென்றே நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். வலு­வான சாட்­சி­யங்கள் அடங்­கிய விசா­ர­ணைகள் உள்­ள­டக்­கிய ஒரு பக்கம் கூட இருக்­க­வில்லை. ஒரு­வரை கைது­செய்­யு­மாறு சட்­டமா அதிபர் பணிப்­புரை வழங்­கு­வ­தாயின் அந்த நபர் தொடர்பில் வலு­வான சாட்சி அடிப்­ப­டை­யொன்று இருக்க வேண்டும். விசா­ரணை அறிக்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே ஆலோ­சனை வழங்க முடியும். 

 கேள்வி : ஏதா­வது ஒரு அர­சாங்க நிறு­வனம் குறை­பா­டு­க­ளுடன் செயற்­பட்டால் அதனை நிவர்த்தி செய்­வது மற்­றைய திணைக்­க­ளத்தின் பொறுப்பு இல்­லையா?

பதில் : பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வினர் விசா­ர­ணைகள் செய்­வதில் சிறப்புத் தேர்ச்சி பெற்­ற­வர்கள் என்­பதால் விசா­ரணை செய்­வது எப்­படி என்று கூறத்­தே­வை­யில்லை. பயங்­க­ரவாத் தடுப்­பி­னரால் முதல் தட­வை­யாக வழங்­கப்­பட்ட கோப்பை கவ­னத்தில் எடுப்­ப­தற்கு வலு­வற்ற கோப்­பாகும். அதா­வது சட்­டமா அதிபர் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்குப் போதிய வலு­வான கோப்பு அல்ல. அதன் பின்னர் ஒரு வரு­டங்­களின் பின்னர் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் அனுப்­பப்­பட்ட இரண்­டா­வது கோப்பில் முன்­ன­ரை­விட மேலும் சில உரை­களும், சீடி­களும் இணைக்­கப்­பட்­டி­ருந்­தன. 

கேள்வி : பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வினர் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பிய கோப்பு தனிப்­பட்ட நோக்­கத்தில் அனுப்­பப்­பட்­டது என நினைக்­கின்­றீர்­களா?

பதில் : இல்லை

கேள்வி : பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் அனுப்­பப்­பட்ட கோப்பில் போதிய சாட்­சி­யங்கள் இல்லை. அவர்கள் வழங்­கிய வீடியோ இணைப்­புக்கள் மற்றும் சீடிகள் போது­மா­னவை இல்லை எனக் கோரிய கடிதம் இருக்­கின்­றதா?

பதில் : இல்லை. பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு ஒரு­வரை கைது­செய்ய வேண்­டு­மாயின், அல்­லது ஒரு இணை­யத்­த­ளத்தை தடை­செய்­வ­தற்கு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் அனு­ம­தியைக் கோரிக்­கொண்­டி­ருக்கத் தேவை­யில்லை. நாம் வழக்கு கோப்­புக்­களின் பின்னால் துரத்­திக்­கொண்­டி­ருப்­ப­தில்லை. 

கேள்வி : சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பப்­படும் கடிதம் அல்­லது கோப்பை பின்­தொ­டர்ந்து நட­வ­டிக்கை எடுப்­ப­தில்­லை­யாயின் பீரிஸ் ஏன் அது தொடர்பில் பல்­வேறு கடி­தங்­களை அனுப்பி நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்?

பதில் : அவ­ருக்கு அனுப்­பப்­பட்ட கடி­தத்தில் முதலில் முறைப்­பாடு செய்த நபரின் விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. முறைப்­பாட்­டாளர் பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு நேர­டி­யாகச் சென்று முறைப்­பாட்டுக் கடி­தத்தைக் கைய­ளித்­த­போது அவ­ரிடம் தக­வல்­களைப் பெற்­றக்­கொண்­டி­ருக்­க­வில்லை. 

கேள்வி : சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் எந்­த­வொரு குறை­பாடும் இல்­லை­யென்று கூற முடி­யுமா?

பதில் : இதற்கு ஆம் இல்­லை­யெனப் பதில் வழங்க முடி­யாது, பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரி­வி­னரால் ஆலோ­சனை கோரி கோப்பு ஒன்றை எமக்கு அனுப்­பி­யி­ருந்­தனர். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் எம்மைச் சந்­தித்­த­போது முழு­மை­யான தக­வல்­க­ளுடன் வந்­தி­ருந்­தனர். ஏன் அவர்கள் அதனை முதலில் எமக்கு அனுப்­ப­வில்லை. திணைக்­க­ளத்தின் பக்­கத்தில் எந்தத் தவறும் இல்லை. சட்­டமா அதிபர், பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளார். சட்­டமா அதிபர் திணைக்­களம் சஹ­ரானை கைது­செய்­யு­மாறு ஆலோ­சனை வழங்­கா­மை­யா­லேயே குண்டு வெடித்­தி­ருப்­ப­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டை முழு­மை­யாக மறுக்­கின்றோம். 2017 ஜுன் மாதம் மட்­டக்­க­ளப்பு மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்தில் அவ­ருக்கு எதி­ராக பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பின்னர் கொழும்பு மஜிஸ்­தி­ரேட்­டி­னாலும் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஏறத்­தாழ இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே சஹ­ரா­னுக்கு எதி­ராக இரண்டு பிடி­யா­ணைகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும், சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான தரப்­பினர் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. 

கேள்வி :- உங்­களின் பக்கம் குறை­பா­டுகள் இல்லை என்றா நீங்கள் கூறு­கின்­றீர்கள் ?

பதில் :- நீண்ட நேர மௌனத்தின் பின்னர் திலிப பீரி­ஸுடன் தனிப்­பட்ட முறையில் கலந்­து­ரை­யா­டி­விட்டு மீண்டும் பதில் கூறிய அவர் " சட்­டமா அதிபர் திணைக்­களம் சரியா என கேட்­கின்­றீர்கள். 22ஆம் திகதி நான் எழு­திய கடி­தத்தில் .

கேள்வி :- நான் டபிள்யூ. இ.ஆர்  தொடர்பில் மட்டும் தான் கேட்­கிறேன். சள­ர­மான கேள்வி இது. உங்­களின் பக்கம் டி.ஐ.டி மீது குற்றம் சுமத்­தலாம். நீங்கள் சரி­யாக நேர்த்­தி­யாக கால தாமதம் இன்றி செயட்­பட்­டுல்­லீர்­களா ?

கேள்வி :- உங்­க­ளுக்கு அபூ­பக்கர் பக்­தாதி  பற்றி தெரி­யுமா ?

பதில் :- தனிப்­பட்ட முறையில் எனக்கு அவரை தெரி­யாது. ஊட­கங்­களில் அவர் ஒரு பயங்­க­ர­வாத அமைப்­பாளர் என்று தெரியும். 

கேள்வி :- தனிப்­பட்ட முறையில் உங்­க­ளுக்கு தெரி­யுமா என நான் கேட்­க­வில்லை.

பதில்:- ஆம் ஊட­கங்­களில் கேள்­விப்­பட்­டுள்ளேன். 

கேள்வி :- சரி சஹ­ரானின் இவ­ளவு மோச­மான பிரச்­சா­ரங்­களை பார்த்தும் கருத்­துக்­களை கேட்டும் ஏன் ஐ.சி.சி.பி.ஆர் பற்றி பேசிக்­கொண்டு இருக்­கி­றீர்கள்? இனி­யா­வது உங்­க­ளுக்கு தெரி­யுமா? நீங்கள் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் குண்டு வெடிப்பும் நடந்­தி­ருக்­காது, சஹ­ரானும் சிறையில் இருந்­தி­ருப்பார் அப்­பாவி மக்­களும் கொல்­லப்­ப­டாது இருந்­தி­ருப்­பார்கள். நீங்கள் வேண்டுமென்றே பொறுப்புகளை  தட்டிக்கழித்துள்ளீர்கள் என்றே நான் நினைக்கின்றேன்? 

பதில் :- நீங்கள்  கூறியதை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அதுமட்டும் அல்ல சமூகத்தில் இன்று சட்டமா அதிபர் திணைக்களம் சஹரானை கைதுசெய்ய ஆலோசனை வழங்கினால் குண்டு வேடிதிருக்காது என்ற கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. நாம் ஆலோசனை வழங்க முன்னர் இரண்டு திறந்த பிடியாணை இருந்தது. இரண்டு ஆண்டுகாலம் ஒரு நபர் மீது இரண்டு திறந்த பிடியாணை இருந்தும் கைதுசெய்யவில்லை. இரண்டு ஆண்டுகள் பிடியாணை இரண்டு இருந்தும் சட்டம் நீதி அமைச்சு ஒழுங்காக சட்டத்தை கையாளாத நிலையில் சஹரானை கைதுசெய்ய முடியாது போயுள்ளது. தயவுசெய்து சட்டமா அதிபர் திணைக்களம் மீது சுமத்தும் குற்றச்சாட்டு மோசமானது. ஆதாரபூர்வமற்றது. (ஆர்.யசி )

No comments

Powered by Blogger.