Header Ads



ஹஜ் செல்ல தயாராகவிருந்து, ஏமாற்றப்பட்டவர்களின் கதை

புனித ஹஜ் கடமை அடுத்த வாரம் நிறை­வுக்கு வர­வுள்­ளது. இவ்­வ­ருடம் கடந்த புதன்­கி­ழமை வரை
1.8 மில்­லியன் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவை சென்­ற­டைந்­துள்­ளனர் என சவூதி அரே­பிய ஹஜ் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளார்கள்.

1,725,455 ஹாஜிகள் வான்­மார்க்­க­மா­கவும் 95,634 பேர் தரை­மார்க்­க­மா­கவும் 17,250 பேர் கடல்­மார்க்­க­மா­கவும் வருகை தந்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

சுமார் 2.5 மில்­லியன் ஹாஜிகள் பங்­கேற்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வ­ருடம் சவூதி ஹஜ் அமைச்­சினால் ஆரம்­பத்தில் 3500 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டது. பின்பு மேல­திக கோட்­டா­வாக 500 வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது ஹஜ் குழு கடந்த 15 ஆம் திகதி கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஜித்தா நோக்­கிப்­ப­ய­ண­மா­னது. இறு­தி­யாக கடந்த 7 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இரு சவூதி அரே­பிய விமா­னங்கள் ஜித்­தா­வுக்குச் சென்­ற­டைந்­தன.

ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் மற்றும் ஹஜ் குழு உறுப்­பி­னர்கள் சிலர் கடந்த 27 ஆம் திகதி சவூதி அரே­பி­யாவைச் சென்­ற­டைந்­தனர்.

மேலும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌஸி, அமைச்சர் ஹலீமின் பிரத்­தி­யேக செய­லாளர் எம்.எச்.எம்.பாஹிம் ஆகியோர் கடந்த 5 ஆம் திகதி சவூதி அரே­பி­யாவைச் சென்­ற­டைந்­தனர்.

இலங்கை ஹாஜி­களின் மருத்­துவ சேவை­க­ளுக்­காக ஒரு பெண் டாக்டர் உட்­பட 5 டாக்­டர்கள் மக்கா, மதீ­னாவில் பணியில் அமர்த்­தப்­ப­ட்ட­ுள்­ளனர். அங்கு இலங்கை ஹாஜி­க­ளுக்­கென பிரத்­தி­யேக மருத்­துவ முகாம்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன.

இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் 93 ஹஜ் முக­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டுகள் எவ்­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் இறுதி நேரத்தில் இரண்டு ஹஜ் முக­வர்­க­ளினால் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அலைக்­க­ழிக்­கப்­பட்­டனர்.

இறுதி நேரத்தில் கைவி­டப்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள்

இவ்­வ­ருட ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக ஹஜ் முக­வர்­க­ளிடம் உரிய கட்­ட­ணங்­களைச் செலுத்தி ஹஜ் பய­ணத்­துக்குத் தயா­ரான நிலை­யி­லுள்ள 123 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை இரண்டு ஹஜ் முக­வர்கள் இறுதி நேரத்தில் ஏமாற்­றி­யுள்­ளதால் அவர்கள் நிர்க்­க­தி­யா­கி­யுள்­ளனர். இவர்­களில் 30 க்கும் மேற்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கடந்த 6 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தை முற்­று­கை­யிட்டு முறைப்­பா­டு­களை முன்­வைத்­தனர். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலீக் ஹஜ் பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளதால் பாதிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் பய­ணிகள் உதவிப் பணிப்­பாளர் அன்வர் அலி­யிடம் நியாயம் கோரி­னார்கள்.

123 ஹஜ் யாத்­தி­ரி­களில் 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஒரு ஹஜ் முக­வ­ரிடம் ஹஜ் கட்­ட­ணங்­களைச் செலுத்­தி­யுள்ள நிலையில் அவர்கள் செலுத்­திய கட்­ட­ணங்கள் அவர்­களை ஹஜ் கட­மைக்கு அழைத்துச் செல்லும் ஹஜ் அனு­ம­திப்­பத்­திர உரி­மை­யா­ள­ரான மற்­றுமோர் ஹஜ் முக­வ­ருக்கு குறிப்­பிட்ட முக­வ­ரினால் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் குறிப்­பிட்ட 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பயண ஏற்­பா­டு­களைச் செய்ய முடி­யாது என ஹஜ் அனு­ம­திப்­பத்­திர உரி­மை­யா­ள­ரான ஹஜ் முகவர் மறுத்­துள்ளார். இந்தப் பிரச்­சினை தொடர்­பான கலந்­து­ரை­யாடல் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் நீண்­ட­நேரம் இடம்­பெற்­றாலும் தீர்­மானம் எட்­டப்­ப­ட­வில்லை. ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­பட்ட கட்­ட­ணத்தை அனு­ம­திப்­பத்­திரம் கொண்ட முக­வ­ரிடம் செலுத்­து­வ­தாக குறிப்­பிட்ட ஹஜ் முகவர் உறு­தி­ய­ளிக்­க­வில்லை. இதனால் 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளையும் பணம் பெற்­றுக்­கொண்ட ஹஜ் முக­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்­படி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, மேலும் 115 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கடந்த 6 ஆம் திகதி மாலை­வரை உரிய விமான டிக்கட் வழங்­கப்­ப­டாது ஒரு ஹஜ் முக­வ­ரினால் அலைக்­க­ழிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் ஹஜ் முக­வ­ருக்கு உரிய கட்­ட­ணங்­களை செலுத்­தி­யி­ருந்­தாலும் சவூதி அரே­பியா விமா­னத்தில் பய­ணிப்­ப­தற்­கான விமான டிக்­கட்­டுக்குப் பணம் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் சவூதி அரே­பிய விமான சேவை விமான டிக்­கட்­டு­களை விநி­யோ­கிக்­க­வில்லை.

விமான டிக்­கட்­டுகள் வழங்­கப்­ப­டா­ததால் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பல அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து பயணத்தை மேற்கொள்ள வந்தவர்கள் ஆவர்.

115 பேர் பயணம் 8 பேர் ஹஜ் யாத்­திரை இழப்பு

ஹஜ் முக­வர்­களால் இறுதி நேரத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த 123 ஹஜ் யாத்­தி­ரி­கர்­களில் 115 பேர் 7 ஆம் திகதி காலை சவூதி விமான சேவை­யூ­டாக ஹஜ் கட­மைக்­காக சவூதி அரே­பியா நோக்கிப் பய­ண­மா­னார்கள்.

ஏனைய 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் முகவர் ஒரு­வ­ருக்கு செலுத்­திய ஹஜ் கட்­டணம் தொடர்­பான பிரச்­சினை குறிப்­பிட்ட ஹஜ் முக­வ­ரினால் தீர்க்­கப்­ப­டா­மை­யினால் அவர்கள் 8 பேரும் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு தடை­யேற்­பட்­டது.

இறுதி நேரத்தில் ஹஜ் முக­வர்­களால் கைவி­டப்­பட்­டி­ருந்த ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் விவ­காரம் 6 ஆம் திகதி முன்­தினம் இரவு 11 மணி வரை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் உத­விப்­ப­ணிப்­பாளர் அன்வர் அலியின் தலை­மையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் அதி­கா­ரிகள் பாதிக்­கப்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்­களில் ஒரு தொகு­தி­யினர் சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முக­வர்கள் கலந்து கொண்­டிருந்தனர்.

115 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான சவூதி அரே­பிய விமான சேவையின் பய­ணச்­சீட்­டு­க­ளுக்­கு­ரிய கட்­ட­ணத்தை செலுத்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட ஹஜ் முகவர் உடன்­பட்டார். அதற்­கி­ணங்க 115 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் 7 ஆம் திகதி சவூதி நோக்கி பய­ண­மா­கினர்.

ஏனைய 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் முக­வ­ரொ­ரு­வ­ருக்குச் செலுத்­திய கட்­ட­ணங்கள் ஹஜ் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துக்கு உரித்­தான ஹஜ் முக­வ­ருக்கு செலுத்­து­வதில் தீர்­வொன்று எட்­டப்­ப­டா­மை­யினால் அவர்­க­ளது ஹஜ் பய­ணத்தில் தடை­யேற்­பட்­டது.

குறிப்­பிட்ட 8 ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும் ஹஜ் முக­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் ஆலோ­சனை வழங்­கி­னார்கள்.

இதே­வேளை, இவ்­வி­வ­காரம் ஹஜ் கடமையில் தற்போது ஈடுபட்டிருக்கும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சர் ஹலீம் சவூதியிலிருந்து தேவையான அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

ஊழல் முக­வர்­க­ளுக்கு சட்ட நட­வ­டிக்கை

ஊழல்­களில் ஈடு­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஹஜ் குழு உறுப்­பினர் எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்தார். ஹஜ் முக­வர்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரிப்­ப­தற்கு ஓய்வு பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் மூவ­ர­டங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

8 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களை ஏமாற்றிப் பணம் பெற்றுள்ள முகவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஹஜ் விண்ணப்பதாரிகள் குறிப்பிட்ட முகவருக்கு கட்டணமாக தலா 6 இலட்சத்து 70 ஆயிரம் கடந்த மே மாதம் செலுத்தியிருந்தும் அவர்கள் ஹஜ் வாய்ப்பை இழந்துள்ளமை அனுமதிக்கப்பட முடியாதது என்றும் தெரிவித்தார்.

மக்காவிலிருந்து எஸ்.என்.எம்.ஸுஹைல்

2 comments:

  1. ஏன்டா நாய்களே ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியா அல்லாஹ்ட அருளை வேண்டி ஹஜ்ஜுக்கு போக வேண்டிய ஆட்களையும் போகமலாக்கி அல்லாஹ்ட சாபத்தையும் வாங்கிக் கட்டிட்டீங்களேடா. இதுக்கு அவர் இவருன்னு பொறுப்புக் கூறாமல் இந்த விடயத்தோட சம்பந்தப்பட்ட எல்லா நாய்களுக்கும் அல்லாஹ்ட சாபம் நேரடியா இறங்கும். யார்டா அந்த ரெண்டு black sheep ம். முன் அனுபவம் இருக்கிறதாலதான் இதனை இப்படி எழுதுகிறேன். Rascals.

    ReplyDelete
  2. பத்திரிகை ஒழுக்கத்துக்பொறுத்தமில்லாத வகையில் குறிப்பாக அல்லாஹ்வுடைய தூதரைப்பின்பற்றுவதாக பறைசாற்றும் இந்த நபர் இப்படி வசைபாடுவது பொறுத்தமானதா என்பதை இணையத்தளத்துக்குப் பொறுப்பானவர்களிடம் கேட்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.