Header Ads



ரிசார்ட் பதியுதீனுக்கு ஜனாதிபதி மீண்டும் அமைச்சு பதவி வழங்கியதை எதிர்க்கின்றோம் - எஸ்.பி.

அமைச்சர் ரிசார்ட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சதொச நிறுவனத்தில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரிகள் எனக் கூறி, நிறுவனத்தில் இருந்து அமைச்சர் பதியுதீன் மாதாந்தம் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார். சிரமப்பட்டு நிரூபிக்க வேண்டியது எதுவுமில்லை.

ரிசார்ட்டின் பணத்தில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவினால், அவர் நிரபராதி என்று பரிந்துரைக்கவும் இல்லை. ஜனாதிபதி அவருக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்கியதை நாங்கள் எதிர்க்கின்றோம். அதேபோல் ரிசார்ட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம்.

பயங்கரமான திருடனுக்கு எதிராக எம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் வேட்பாளரை மனதார வாழ்த்துகிறேன்.

பொதுஜன பெரமுன நிறுத்தும் வேட்பாளர் பொது வேட்பாளராக இருப்பார். அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. எஸ்.பீ.டீ எனப்படும் உலகப் புகழ்பெற்ற கள்ளனை உமது தேர்தல் தொகுதி மக்கள் அல்லது உமது நடவடிக்கைகள் பற்றி மிகவும் அறிந்த மக்கள் ஒதுக்கித் தள்ளி பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்து பின்பும் இந்த நாட்டின் கோழை அரசாங்கம் உம்மை மீண்டும் ஓசிப்பட்டியலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்து பொதுமக்களின் விருப்பத்துக்கு எதிராகசெயல்பட்ட இந்த நாட்டின் பொறுப்பற்ற தலைமைக்கு நாம் முழுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். நாட்டின் பொதுச்சொத்தையும் குறிப்பாக சமூர்த்தி உதவிபெறும் மக்கள் ஒருவரிடமிருந்து 100 ரூபாவைவெட்டி மாதத்துக்கு கோடான கோடி ரூபாக்களை விழுங்கி ஏப்பமிடும்போதும் வாளாவிருந்த அல்லது கண்டும் காணாதிருந்த ஏழைகளின் இரத் த த்தை உரிஞ்சிக் குடித்த உம்மை இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் எதிர்க்கும் போது இந்நாட்டு தலைவர் அவருடையசொந்த நலத்துக்காக உம்மை பாராளுமன்றத்துக்கு நியமனம் செய்த தலைவரின் செயலையும் நாம் முழுமையாக எதிர்ப்பதுடன் இந்த நாட்டு மக்கள் உங்கள் இருவருக்கும் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கின்றனர் என்ற செய்தியை ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

    ReplyDelete
  2. எஸ்.பீ.டீ எனப்படும் உலகப் புகழ்பெற்ற கள்ளனை உமது தேர்தல் தொகுதி மக்கள் அல்லது உமது நடவடிக்கைகள் பற்றி மிகவும் அறிந்த மக்கள் ஒதுக்கித் தள்ளி பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்து பின்பும் இந்த நாட்டின் கோழை அரசாங்கம் உம்மை மீண்டும் ஓசிப்பட்டியலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்து பொதுமக்களின் விருப்பத்துக்கு எதிராகசெயல்பட்ட இந்த நாட்டின் பொறுப்பற்ற தலைமைக்கு நாம் முழுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். நாட்டின் பொதுச்சொத்தையும் குறிப்பாக சமூர்த்தி உதவிபெறும் மக்கள் ஒருவரிடமிருந்து 100 ரூபாவைவெட்டி மாதத்துக்கு கோடான கோடி ரூபாக்களை விழுங்கி ஏப்பமிடும்போதும் வாளாவிருந்த அல்லது கண்டும் காணாதிருந்த ஏழைகளின் இரத் த த்தை உரிஞ்சிக் குடித்த உம்மை இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் எதிர்க்கும் போது இந்நாட்டு தலைவர் அவருடையசொந்த நலத்துக்காக உம்மை பாராளுமன்றத்துக்கு நியமனம் செய்த தலைவரின் செயலையும் நாம் முழுமையாக எதிர்ப்பதுடன் இந்த நாட்டு மக்கள் உங்கள் இருவருக்கும் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கின்றனர் என்ற செய்தியை ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

    ReplyDelete
  3. SPD naye kallan enra sollukku neethan utharana purusan enpathai maranthu vittayo.

    ReplyDelete

Powered by Blogger.