Header Ads



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை, சஜித் பிரேமதாஸவின் மடியில் அடகு வைப்பதற்கு ஒருசிலர் முயற்சி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சஜித் பிரேமதாஸவின் மடியில் அடகு வைப்பதற்கு ஒருசிலர் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

கண்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சஜித் பிரேமதாஸவின் மடியில் அடகு வைப்பதற்கு ஒருசிலர் முயற்சிக்கின்றனர். அவர்களால் அதனை ஒருபோதும் செய்ய முடியாது.

சுதந்திரக் கட்சி மற்றைய கட்சியொன்றின் நிழலில் இருக்க போவது இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க உள்ளோம் என்றார்.

2 comments:

  1. If Ranil contests instead of Sajid, all anti Gota votes would go to Anura and Ranil would be pushed to a bad third place thus ending his political career.

    ReplyDelete
  2. @ Jong Aiya, Absolutely correct. We all expect the same.

    ReplyDelete

Powered by Blogger.