Header Ads



தலைவருக்கு எதிராக யாராவது, செயற்பட்டால் கடும் நடவடிக்கை - ஐதேக எச்சரிக்கை

கட்சி தலைவரின் செயற்பாட்டிற்கு எதிராக யாராவது செயற்படுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்குத் தேவையான தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு வெற்றிபெறுவதற்கான தீர்மானம் கட்சியினால் முன்னெடுக்கப்படும். இதுவரையில் எந்தவொருவரும் பெரஹரவில் செல்லவில்லை.

இந்நிலையில், பலர் குறித்தும் பிரச்சினைகள் உள்ளன. பொருத்தமான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.