Header Ads



சஜித் ஜனாதிபதியானால், நான்தான் பிரதமர் - சுஜீவ

அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவாகும் தினத்தில் பிரதமராக தன்னை நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக கொண்டு வர தான் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு அமைய தான் பிரதமராகும் வாய்ப்பும் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்கால பிரதமர் பதவி தொடர்பாக சஜித் பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி தீரமானிக்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச கட்டாயம் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.

அமைச்சர்கள் றிசார்ட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரின் கட்சிகளும் சஜித்துக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளன. அவர்களின் கட்சிகளை சேர்ந்த 100 வீதமானோர் சஜித்தையே கோருகின்றனர் என தனக்கு அறிவித்துள்ளதாகவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. I whould like to become a Finance minister 🤑

    ReplyDelete
  2. PDIPPARIVU ILLAAZAVAR JANAZIPAZI
    APETCHAHARAA ???.
    IVARAITHAN VEINDUM, ENGIRAVALHALUM
    PADITHAVARHALA, ENRU KETKA THONRUHIRAZU.
    MUSLIMGALAI
    ALLAH PAAZUKAAPPAANAAHA.

    ReplyDelete

Powered by Blogger.