Header Ads



பாதுகாப்புக்காக 2 முஸ்லிம்கள் நியமனம் - அஞ்சி நடுங்கும் ஆஷு மாரசிங்க Mp

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹவின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்ட அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்கவின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் தனது பாதுகாப்பிற்காக குறித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

குறித்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் முஸ்லிம் மதத்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவர் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், மற்றைய அதிகாரி மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஆஷு மாரசிங்க முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆஷு மாரசிங்க, மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. கல்வி கற்றவர்களும் கூட இப்போதய காலத்தின் கோலம்,ஒரு சுய சிந்தனை,பொது அறிவு இல்லாமல் கானப்படுவதுதான் இப்போ Sri Lanka க்கு உள்ள சாபக்கேடு.

    ReplyDelete
  2. A very well known racist.

    ReplyDelete
  3. THAVARU ALLAZU, MATRAVARKALUKKU THUROHAM SHEIZAVAN NICHAYAM
    PAYAPPADUWAN.

    EZAVAZU THARU SHEIZU IRUPPAN.

    ReplyDelete

Powered by Blogger.